×

முதல்முறையாக உக்ரைன் அதிரடி; மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: கீவ் மீது ரஷ்யா பதிலடி

கீவ்: போர் தொடங்கிய 15 மாதங்களில், முதல் முறையாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. பதிலடியாக ரஷ்யா உக்ரைன் மீது சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. க்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி 15 மாதங்கள் கடந்த நிலையில், நேற்று முதல் முறையாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் இந்த அதிரடி தாக்குதலை நடத்தியது. அதிகாலை நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் அவசரமாக சேதம் அடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் மாஸ்கோவை தாக்க ஊடுருவிய 3 டிரோன்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தின. இவை 1000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடியவை.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனின் தலைநகர் கீவில் ஒரே நாளில் 3வது முறையாக ரஷ்யா ஈரானிடம் இருந்து வாங்கிய ஷாகித் டிரோன்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். மேலும் ஒரு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் ரஷ்யா ஏவிய 20க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா ஏவிய 31 டிரோன்களில் 29 டிரோன்களை உக்ரைன் ராணுவம் இடைமறித்து அழித்து விட்டது என்று கீவ் நகர ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

The post முதல்முறையாக உக்ரைன் அதிரடி; மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: கீவ் மீது ரஷ்யா பதிலடி appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Moscow ,Russia ,Kiev ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...