×

திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

வருசநாடு, மே 31: வருசநாடு அருகே சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது 2வது மகன் முத்தையா (27), விவசாயத் தொழில் செய்து வந்தார். திருமணத்திற்காக பல இடங்களில் பெண் பார்த்தும் பெண் அமையவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக முத்தையா மன வருத்தத்தில் இருந்து உள்ளார். நேற்று முன்தினம் தனது தம்பி குமார் வீட்டில் தூங்குமாறு முத்தையாவிடம் சந்திரன் கூறிள்ளார். நேற்று அதிகாலை சந்திரன் மனைவியுடன் சென்று பார்த்தபோது முத்தையா குமார் வீட்டில் விட்டத்தில் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சந்திரன் கொடுத்த புகாரில், வருசநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Chandran ,Singarajapuram ,Muttiah ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்