×

திருவொற்றியூர்-மீஞ்சூர் வரை போக்குவரத்துக்கு இடையூறு 120 லாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்: சிமெண்ட் தடுப்புகளை அகற்றினால் நடவடிக்கை

பொன்னேரி: திருவொற்றியூர்-மீஞ்சூர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 120 லாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆவடி சரக காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின்படி, போக்குவரத்து துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆலோசனைபடி, செங்குன்றம் போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி மேற்பார்வையில், போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் தலைமையில், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார், திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை போக்குவரத்துக்கு இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த 120க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். மேலும், கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தாதபடி இருசக்கர வாகனங்கள், கார்கள் செல்லும் அளவிற்கு வழி விட்டு சிமெண்ட் சுவர் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், லாரிகள் சாலையில் நிறுத்த முடியாது எனவும், சிமெண்ட் தடுப்பு சுவரை அகற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆய்வாளர் தெரிவித்தார்.

The post திருவொற்றியூர்-மீஞ்சூர் வரை போக்குவரத்துக்கு இடையூறு 120 லாரிகளுக்கு ரூ.3.5 லட்சம் அபராதம்: சிமெண்ட் தடுப்புகளை அகற்றினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur-Meenjoor ,Ponneri ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு