×

திருவொற்றியூர் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மின்மாற்றிகள்: மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரூ.17 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 2 புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டன. திருவொற்றியூர், பீர் பயில்வான் தர்கா தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு காலடிப்பேட்டை மின்வாரிய அலுவலகம் சார்பில் மின் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம், மின் தடை போன்ற பிரச்னை இருந்தது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதையடுத்து இந்த பகுதியில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் பானுமதி சந்தர் மற்றும் குடியிருப்போர் நலசங்கம் சார்பில், எம்எல்ஏ கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து ரூ.17 லட்சம் செலவில் பீர் பயில்வான் தர்கா தெரு மற்றும் பிரதான சாலை ஆகிய 2 இடங்களில் புதிதாக 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.

இதற்கான பணிகள் முடிவடைந்ததையொட்டி, தமிழ்நாடு மின்வாரியம், சென்னை வடக்கு மண்டல மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் உதயசூரியன், உதவி பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், தினேஷ் மற்றும் கவுன்சிலர் பானுமதி சந்தர் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் மின்மாற்றிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டன.

The post திருவொற்றியூர் பகுதியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மின்மாற்றிகள்: மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Thiruvotiyur ,Bir Pailwan… ,Tiruvotiyur ,
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...