×

குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஆவடி: ஆவடி, நந்தவனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்(20). கவரப்பாளையம் பகுதியில் உள்ள கடையில் கார் வீல் அலைன்மென்ட் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் நீண்ட நாட்களாக மது போதை பழக்கத்திற்கு அடிமையானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு வருடமாக குடிக்காமல் நன்றாக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது அக்கா ரம்யா(30) கண்டித்ததால், மிகவும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

அன்றிரவு தூங்க சென்றவர். மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை எனவே, சந்தேகம் அடைந்த ரம்யா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அஜித் மின் விசிரி கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Waliber ,Awadi ,Ajith ,Nandavanam Mattur ,Car Wheel Allinement Work Shop ,Cockroach ,Dinakaran ,
× RELATED அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்