×

அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்

புதுக்கோட்டை, மே 30: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணம், வடக்கு அம்மாபட்டிணம் மற்றும் புதுக்குடி ஆகிய கிராமங்களில், மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்தின்கீழ், ரூ.6 கோடி மதிப்பீட்டில், மீன் இறங்குதளங்கள் கட்டுப்பட்டு வருகிறது. இதனை மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா.ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்களின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, புதிதாக மீன்பிடி இறங்குதளங்கள் உள்ளிட்ட மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 8.6.2022 அன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாப்பட்டிணம் மீன்பிடி இறங்குதளங்கள் தலா ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். அதன்டி ரூ.30 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அரசிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டைப்பட்டிணம் மீன் இறங்குதளமானது, 30மீX12மீ அளவுடைய ஒரு மீன் ஏலக்கூடமும்,30மீX12மீ அளவுடைய ஒரு வலைபின்னும் கூடமும், 20மீ X 15மீ அளவுடைய இரண்டு மீன் உலர்தளங்களும் மற்றும் 170 மீ அளவில் சாலை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

வடக்கு அம்மாபட்டிணம் மீன் இறங்குதளமானது, 30மீ X 12மீ அளவுடைய ஒரு மீன் ஏலக்கூடமும், 20மீ X 15மீ அளவுடைய ஒரு மீன் உலர்தளமும் மற்றும் 165 மீ அளவில் சாலை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் புதுக்குடி மீன் இறங்குதளமானது, 30மீ X 12மீ அளவுடைய ஒரு மீன் ஏலக்கூடமும், 20மீ X 15மீ அளவுடைய ஒரு மீன் உலர்தளமும் மற்றும் 100 மீ அளவில் சாலை வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டங்கள் மூலம் சுற்றுப்புற கடலோர கிராம மீனவர்கள் மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன் பொருளாதாரம் உயர்வு பெறும். மீனவர்கள் தங்களது வலைகளை பாதுகாப்பாக வைக்கவும் மற்றும் எளிதாக கையாளவும் உதவிகரமாக இருக்கும்.

எனவே மீனவர்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, மச்சுவாடியில் அமைந்துள்ள 694 ஏக்கர் பரப்பளவுள்ள புதுக்கோட்டை கால்நடைப் பண்ணையில், அலுவலர்களுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைப் பண்ணையில் கால்நடைகளின் எண்ணிக்கை, பால் உற்பத்தி, பராமரிப்பு தொடர்பாக அலுவலர்களுடன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ செல்வி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், அப்துல்லா எம்பி, புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Kottapattinam ,North Ammapattinam ,Pudukkudi ,
× RELATED தடைகாலம் நீடிப்பதால் மீன்கள் வரத்து குறைவு… விலை கிடுகிடு உயர்வு…