×

போக்சோ வழக்கில் தலைமறைவானவர் கைது

நெல்லை, மே 30: நெல்லையில் போக்சோ வழக்கில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைதுசெய்தனர். பாளையங்கோட்டை அருகே கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் சுபாஷ் என்ற சுபீன் (23). கடந்த 2019ம் ஆண்டு போக்சோ வழக்கில் இவரை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த இவர், கடந்த 5 மாதங்களாக கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவரை கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு நெல்லை கோர்ட் போலீசாருக்கு கைதாணை பிறப்பித்தது. அதன்பேரில் சுபாஷை தீவிரமாகத் தேடிவந்த தாலுகா ேபாலீசார், நேற்று அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post போக்சோ வழக்கில் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Tags : Absconder ,Nellai ,POCSO ,Kakanji ,Palayankot ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...