×

பழநியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

பழநி, மே 30: பழநி பெரிய பள்ளிவாசல் பகுதியில் கடந்த மே 19ம் தேதி ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த தகவலின் பெயரில் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளை கண்ட கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. அக்கும்பல் விட்டு சென்ற 160 கிலோ ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து தப்பி ஓடிய அக்கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அரிசி கடத்தலில் ஈடுபட்ட பழநி மதீனா நகரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (23) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார், கடத்தலில் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருகின்றனர்.

The post பழநியில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Palani ,Palani Periya Palliwasal ,Dinakaran ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது