×

ப்ரிட்ஜ் `ஸ்டெபிலைசர்’ வெடித்து பட்டதாரி இளம்பெண் பலி

வி.கே.புரம்: நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சேகர் (60). இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுபா (24). பி.காம். பட்டதாரியான இவர், பட்டய கணக்கு பயிற்சி (சிஏ) முடித்துள்ளார். இந்நிலையில் இன்று (29ம்தேதி) அதிகாலை 6 மணி அளவில் வீட்டில் ப்ரிட்ஜ் மேல் வைக்கப்பட்டிருந்த `ஸ்டெபிலைசர்’ உபகரணம் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதன் அருகில் இருந்த சுபா உடலில் தீப்பற்றி சம்பவ இடத்தில் இறந்ததாக தெரிகிறது.

தகவல் அறிந்து வி.கே.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ேமலும் சுபா, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வீட்டில் ஸ்டெபிலைசர் வெடித்ததில் சுபா இறந்து விட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சம்பவ இடத்தில் தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வறிக்கை வெளியான பின்னரே சுபா, ஸ்டெபிலைசர் வெடித்து இறந்தாரா? என்பது உறுதியாக தெரியவரும் என்றனர். போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ப்ரிட்ஜ் `ஸ்டெபிலைசர்’ வெடித்து பட்டதாரி இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : VKpuram ,Shekhar ,Agasthiyarpatti Vallalar Street ,Nellai district ,Sundari ,Dinakaran ,
× RELATED வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு