×

துருக்கி அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் தயீப் எர்டோகன் :ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்!!

அங்காரா: துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபர் எர்டோகன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். துருக்கியில் கடந்த 2003 ம் ஆண்டு முதல் தயீப் எர்டோகன் (69) ஆட்சியில் இருந்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014 ம் ஆண்டு அப்பதவியை கலைத்து உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். இந்தச் சூழலில் கடந்த 14ம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், எதிர்க்கட்சி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும் பெற்றனர். துருக்கியின் அரசியல் வழக்கப்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார்.

கடந்த பிப்ரவரியில் துருக்கி – சிரிய எல்லையில் பயங்கர பூகம்பத்தால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று அதிபர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. அதில் தயீப் எர்டோகன் 52% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி தேர்தல் வாரியத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தயீப் எர்டோகனின் வெற்றிச் செய்தி வெளியானதும் அதிபர் மாளிகைக்கு வெளியே உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. கைகளில் தேசிய கொடியுடன் திறண்ட பல்லாயிரக்கணக்னோர் தயீப் எர்டோகனை வாழ்த்தி முழக்கமிட்டனர்.எர்டோகன் 2028ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பார்.

The post துருக்கி அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் தயீப் எர்டோகன் :ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Turkey ,Dayeep Erdogan ,Ankara ,President ,Erdogan ,Dinakaran ,
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...