×

சாராய வியாபாரிக்கு உடந்தையாக செயல்பட்ட எஸ்ஐ பணியிடமாற்றம்: வேலூர் எஸ்பி உத்தரவு

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டில் 2,700 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சாராய வியாபாரிக்கு உடந்தையாக செயல்பட்ட எஸ்ஐ பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் முகமத் அனீஸ் என்பவரின் வெல்லமண்டியில் நேற்று முன்தினம் பேரணாம்பட்டு போலீசார் சோதனை நடத்தி, சாராய வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ வெல்லம், அருகில் பழனி என்பவரின் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 1200 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அனீஸ், பழனி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி நடத்திய விசாரணையில், சாராயம் காய்ச்சுபவர்களுக்கு வெல்லம் சப்ளை செய்யும் விவகாரத்தில் பேரணாம்பட்டு எஸ்ஐ தேவபிரசாந்த் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்ஐ தேவபிரசாத்தை வேலூர் தெற்கு போலீஸ் நிலைய குற்றப்பிரிவுக்கு மாற்றி எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

The post சாராய வியாபாரிக்கு உடந்தையாக செயல்பட்ட எஸ்ஐ பணியிடமாற்றம்: வேலூர் எஸ்பி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore SP ,Peranampatu ,SI ,Peranampat ,Dinakaran ,
× RELATED பைக் மெக்கானிக் போக்சோவில் கைது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த