×

4 வயது குழந்தை புற்றுநோயால் சாவு: விரக்தியில் தாயும் தற்கொலை

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா(27). இவர்களின் 4வயது மகள் ஜஸ்விதாவுக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக ரூ25 லட்சம் வரை செலவு செய்து சிகிச்சை அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு ராமன் வந்து மனைவியுடன் சேர்ந்து குழந்தையை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஜஸ்விதா இறந்தாள். அன்று மாலையே அடக்கம் செய்தனர். ஒரே குழந்தை இறந்ததை எண்ணி விரக்தியடைந்த ஐஸ்வர்யா நேற்றுமுன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post 4 வயது குழந்தை புற்றுநோயால் சாவு: விரக்தியில் தாயும் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Raman ,Jolarbati ,Thirupattur District ,Jolarbate, Kunnathur ,
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...