×

துப்பாக்கியால் சுட்டு சிஆர்பிஎப் வீரர் தற்கொலை

கோவை: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பெருமாள்குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (32). சிஆர்பிஎப் வீரர்.கோவை துடியலூரில் உள்ள சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் பணியில் இருந்தார். முதல் மனைவியுடன் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மாதம் ஜெகன் 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி குடியிருப்பு பகுதியில் நேற்று மதியம் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெகன் எஸ்எல்ஆர் ரக துப்பாக்கியால் கழுத்தில் 2 ரவுண்டு சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post துப்பாக்கியால் சுட்டு சிஆர்பிஎப் வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CRPF ,Coimbatore ,Jagan ,Perumalkulam ,Chatankulam, Thoothukudi district ,Dudiyalur, Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்