- ராமேஸ்வரம்
- இராமநாதசுவாமி திருக்கோவில்
- விபிசாணர் பட்டாபிஷேகம்
- கோதண்டராமர் கோயில்
- தனுஷ்கோடி
- இராமலிங்க பரதீசவ விழா
ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழாவின் இரண்டாம் நாளான நாளை தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் வைபவம் நடைபெறுகிறது. அதனால் நாளை அதிகாலை 6 மணிக்குள் ஸ்படிகலிங்கபூஜை மற்றும் காலபூஜைகள் முடிந்து 7 மணிக்கு ராமர், சீதை, விபீஷணர் கோதண்டராமர் கோயில் எழுந்தருளுகின்றனர்.
அங்கு மதியம் ஒரு மணியளவில் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை 7 மணிக்கு ராமர் புறப்பாடானவுடன் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படும். பகல் முழுவதும் அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகிறது.
The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நாளை நடை அடைப்பு appeared first on Dinakaran.