×

கூலித் தொழிலாளி தற்கொலை

ஈரோடு,மே27: பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (32). இவரது மனைவி பரிமளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விவசாயக் கூலித் தொழிலாளியான மூர்த்தி மதுவுக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.மேலும், மது குடிப்பதால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் கூறி வந்தாராம்.இந்நிலையில், பள்ளி விடுமுறை என்பதால் மனைவி பரிமளா குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மூர்த்தி மது போதையில் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கூலித் தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Murthy ,Samanapuram, ,Karumandishellipalayam ,Perundurai ,Parimala ,
× RELATED எம்.பி. கணேசமூர்த்தியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு