×

மானாமதுரை அருகே டிரைவரை கொன்று நாடகம்: மகன், மனைவி, மகள் கைது

மானாமதுரை, மே 27: மானாமதுரை அருகே லாரி டிரைவரை கொலை செய்து, விபத்து போல நடித்து நாடகமாடிய மகன், உடந்தையாக இருந்த 2 நண்பர்கள் மற்றும் டிரைவரின் மனைவி, மகளையும் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உதயகண்ணன் (45). லாரி டிரைவர். கடன் பிரச்னையால் ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய, உதயகண்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் மானாமதுரை டவுன் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த மாதம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சீரகம்பட்டி விலக்கு அருகே அடையாளம் தெரியாத ஒருவர் இறந்து கிடந்தார். சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். இதில் இறந்து கிடந்தது உதயகண்ணன் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக உதயகண்ணனின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவரது 17 வயதான மகன் அளித்த பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, தந்தை உதயகண்ணனை, அவர் கட்டையால் அடித்து கொலை செய்ததும், அதை விபத்து போல ஜோடித்து, உடலை சாலையோரம் போட்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து அவரையும், அவரது நண்பர்கள் லாடனேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (19), சூரியபிரசாந்த் (19) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் உதயகண்ணனின் மனைவி புஷ்பலதா (42) மற்றும் மகள் தாரணிக்கும் (22) இந்த கொலையில் தொடர்பு உள்ளது என்பது தெரிந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மானாமதுரை அருகே டிரைவரை கொன்று நாடகம்: மகன், மனைவி, மகள் கைது appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...