×

மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்ந்து நிதிஆயோக் கூட்டத்தை மேலும் 2 முதல்வர்கள் புறக்கணிப்பு

புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர்கள் கெஜ்ரிவால், பகவந்த்மான் ஆகியோர் அறிவித்து உள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். அதில்,’ டெல்லி சேவைகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு பிறப்பித்த அவசர ஆணையை எதிர்த்து நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்’ என்றுள்ளார்.

The post மேற்குவங்க முதல்வர் மம்தாவை தொடர்ந்து நிதிஆயோக் கூட்டத்தை மேலும் 2 முதல்வர்கள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata ,Chief Ministers ,Niti ,New Delhi ,Kejriwal ,Bhagwantman ,Niti Aayog ,Modi ,Delhi ,
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு