×

கதவு திறந்த நிலையில் தரையிறங்கிய விமானம்

சியோல்: தென்கொரியாவின் ஜெஜூ தீவில் இருந்து தென்கிழக்கு நகரான டேகு நோக்கி 194 பயணிகளுடன் நேற்று ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க துவங்கும்போது அதில் இருந்த பயணி ஒருவர் அவசரகால கதவை திறக்க முயற்சித்துள்ளார். இதனால் கதவு பாதி திறந்து கொண்டது. விமானத்திற்குள் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அவசரகால கதவை திறந்த நபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post கதவு திறந்த நிலையில் தரையிறங்கிய விமானம் appeared first on Dinakaran.

Tags : Seoul ,Asiana Airlines ,South Korea ,Jeju Island ,Daegu ,Dinakaran ,
× RELATED வடகொரியா போருக்கு தயாராகி வருகிறது:...