×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா: ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை

தூத்துக்குடி: ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா வரும் ஜூன் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இந்த வைகாசி விசாக திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் நடந்தே கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, வரும் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது; திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 19-ம் தேதி வெள்ளிக்கிழமை 02.06.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 10.06.2023 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா: ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visha Festival ,Thiruchendur Subramanian Swami Temple ,Thoothukudi ,District Collector ,Sendilraj ,Thoothukudi district ,Tutukudi District ,Vaigasi Visaga Festival ,Thiruchendur ,Subramanian ,Swami Temple ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...