×

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்..!!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதன் காரணமாக இலவச தரிசன டோக்கன் கிடைக்காத பக்தர்கள் ஏராளமான அளவில் திருப்பதி மலைக்கு சென்று இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் நிரம்பி உள்ளனர். வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் காத்திருக்கின்றனர்.

எனவே டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்திற்காக சென்ற பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக சுமார் 36 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர். வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 5கி.மீ. நீள வரிசையில் நிற்கின்றனர். ரூ.300 டிக்கெட்டுகளை முன் பதிவு செய்த பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்தும், இலவச தரிசனத்திற்காக டோக்கன் வாங்கிய பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்தும் ஏழுமலையானை வழிபடுகின்றனர். இதனிடையே பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் ரூ.3.37 கோடி தேவஸ்தானத்திற்கு வருமானம் கிடைத்துள்ளது.

The post திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Sami ,Tirupati ,Tirupati Eyumalayan Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...