×

சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே கார் மீது தனியார் பஸ் மோதி 5 பெண்கள் உள்பட 18 பேர் காயம்

பெரம்பலூர் : பெரம்ப லூர் மாவட்டம், சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே முன்னால் சென்ற கார் மீது சுற் றுலா சென்ற தனியார் பஸ் மோதிய விபத்தில் 5பெண்கள் உள்பட 18 பேர் காயமடைந்தனர்.ஆந்திர மாநிலத்திலிருந்து 41 பேர்கள் தனியார் பஸ் சில் நாகர்கோவிலுக்கு சுற் றுலா சென்றனர். பஸ்சை ஆந்திராவைச் சேர்ந்த ரமே ஷ் என்பவர் ஓட்டி வந்தார். நாகர்கோயிலில் சுற்றுப் ப யணத்தை முடித்து விட்டு 24ம் தேதி இரவு புறப்பட்டு நேற்று (25ம் தேதி) அச்சரப் பாக்கம், மேல் மருவத்தூர் கோயிலுக்கு செல்வதற்கா க சென்னை நோக்கிச் செ ன்று கொண்டிருந்தனர்.

நேற்று அதிகா லை 2-மணிக்கு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரம்பலூர் மா வட்டம்,சிறுவாச்சூர் மேம்பா லம் மேற்கு சர்வீஸ் சாலை யருகே வந்தபோது, பஸ் டிரைவர் தூக்கக் கலக்கத் தில், முன்னாள் சர்வீஸ் ரோட்டில் கீழே இறங்கிக் போது காரின் மீது மோதியுள்ளார். டமாலென்ற சத்த த்தில் உடனே கண்விழித்த டிரைவர் பஸ்சை வலது பக்கம் திருப்பியபோது, மேம் பாலம் ஏறுமிடத்தில் சாலைப் பணிக்காக குவிக்கப் பட் டிருந்த மண்மேட்டில் சொருகி விபத்துக்கு உள்ளானது.

இதில் பஸ்சில் பயணித்த சுற்றுலாபயணிகள் 15 நபர் களுக்கு லேசான காயமும் 3 நபர்களுக்கு பலத்த காய மும் ஏற்பட்டது. காயமடை ந்த 18 பேர்களில் 5 பேர் பெ ண்கள் ஆவர். சம்பவம் குறி த்து தகவலறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந் து போலீசார் பஸ்சில் காய மடைந்தவர்களைமீட்டு சிகி ச்சைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் விபத்து குறி த்து பஸ் டிரைவர் ரமேஷ், சென்னையை சேர்ந்த கார் டிரைவர்கிறிஸ்டோபர் ஆகி யோரிடம் விசாரணை நடத் தி வருகின்றனர்.

The post சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே கார் மீது தனியார் பஸ் மோதி 5 பெண்கள் உள்பட 18 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Siruvachur ,Perambalur ,Peramba Lur district ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...