×

விழுப்புரம் பவ்டா நிதி நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கார், இரு சக்கர வாகனம்

*நிறுவனர் ஜாஸ்லின் தம்பி வழங்கினார்

விழுப்புரம் : விழுப்புரம் பவ்டா நிதி நிறுவனம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர ஆர்பிஐ கோட்பாட்டின்படி பவ்டா நிதி நிறுவனம் அவர்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. வங்கிகளில் இருந்து கடன் பெற்று மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டு பொறுப்பு குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கி மிக சிறந்த முறையில் செயல்படுத்திய களப்பணியாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் வட்டார பொறுப்பாளர்களுக்கு வாகனங்கள் பரிசு வழங்கும் நிகழ்ச்சி பவ்டா நிதி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது.

பவ்டா நிறுவனர் ஜாஸ்லின்தம்பி தலைமை தாங்கி இதனை பணியாளர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்தார். அதன் அடிப்படையில் களப்பணியாளர்கள் கலா, விஜயலட்சுமி, விஜயா, தேவி, சசிகலா, ராஜலட்சுமி ஆகியோருக்கும். கடலூர் மாவட்டம் சுதா, சாந்தி, செங்கல்பட்டு மாவட்டம் வனஜா, சரஸ்வதி, கன்னியாகுமரி மாவட்டம் ஸ்டாரி ஆகியோருக்கு இரு சக்கர வாகனமும், விழுப்புரம் கிளை முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், வட்டார மேலாளர்கள் ராமச்சந்திரன், சங்கர், ஆனந்தவேலன் ஆகியோருக்கு கார் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான வாகனங்களை வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.

துணை மேலாண்மை இயக்குனர் அல்பினாஜாஸ், முதுநிலை பொதுமேலாளர் சாந்தாராம், செல்வம், முதன்மை நிதி அலுவலர் பாலாஜி, ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் 2023-24ம் நிதி ஆண்டில் களப்பணியாளர்கள் ரூ.6 கோடி இலக்கும், கிளை மேலாளர்கள் ரூ.30 கோடி இலக்கும், வட்டார மேலாளர்கள் ரூ.60 கோடி இலக்கும் அடைந்தால் இதுபோன்ற அலுவலக பணிக்காக கார், இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்றும் பவ்டா நிறுவனர் ஜாஸ்லின்தம்பி தெரிவித்தார். கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

The post விழுப்புரம் பவ்டா நிதி நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கார், இரு சக்கர வாகனம் appeared first on Dinakaran.

Tags : Viluppuram Pawda ,Jaslyn Grandpa ,Vilappuram Pawda Financial Institution ,Vilapuram Pawda Finance Company ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி...