சென்னை: புதிய நாடாளுமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூர் பள்ளிச்சாலையில், அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. இதை, முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற அலுவலகம் திறப்பு விழாவில், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக சார்பில் கலந்துகொள்ள உள்ளனர். எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்வாரா என்பதை அவர்தான் முடிவு செய்வார்.
குடியரசு தலைவர் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி தெரியாது. எங்கள் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது நாங்கள் கலந்து கொள்கிறோம். பிரதமர் நாடாளுமன்ற அலுவலகத்தை திறந்து வைப்பது குறித்து நீங்கள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். தமிழகத்தில் இருந்து செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைப்பது நமக்கு பெருமை, அதிமுக ஆட்சியில் தங்கமணி அமைச்சராக இருந்தபோது, மது பாட்டலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கவில்லை, அதை நான் உறுதியாக கூறுவேன். தற்போது அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் நிச்சயம் தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்’ என்றார்.
The post நாடாளுமன்ற அலுவலகம் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் பங்கேற்பு: மாஜி அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.