- பல்நோக்கு மருத்துவ முகாம்
- தமிழ்நாடு நெடுஞ்சாலை
- அமைச்சர்
- ஏ முதலியார். வேலு
- சென்னை
- பல்நோக்கு மருத்துவ முகாம் பொதுப் பணிகள்
- நெடுஞ்சாலை
- ஆராய்ச்சி
- ஸ்டேஷன் வளாகம்
சென்னை: கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பல்நோக்கு மருத்துவ முகாமை பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் பொருட்டு பல்நோக்கு மருத்துவ முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.
நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உடல் நலத்தினை பேணும் பொருட்டு, காவேரி மருத்துவமனையின் உதவியுடன், பொது மருத்துவம், இதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், மற்றும் உணவியல் நிபுணர்கள் மூலம் இம்முகாம் நடைபெற்றது. மேலும், அலுவலர்கள் அனைவரும் ‘வருமுன் காப்போம்‘ என்ற கருத்தினை மனதில் கொண்டு எந்தவித தயக்கமும் இன்றி இந்த முகாமினை பயன்படுத்தி பலன் பெறுமாறு அமைச்சர் எ.வ.வேலு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளார். இதில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் பிரதீப் யாதவ், காவேரி மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அய்யப்பன் பொன்னுசாமி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு பல்நோக்கு மருத்துவ முகாம்: அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.