×

தனியார் பள்ளிகள் தமிழ் பாடத்தை நடத்துவதை கண்காணிக்க வேண்டும்

சென்னை: தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுடன் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த இணைய வழிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், பள்ளித் தூய்மை, விலையில்லாப் பொருட்களை உடனே வழங்குவது, தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் தமிழ் கட்டாய பாடம் என்பதை தனியார் பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா? தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான இணையவழி கூட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

The post தனியார் பள்ளிகள் தமிழ் பாடத்தை நடத்துவதை கண்காணிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...