சென்னை: தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது. போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கிய 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூரில் வழக்குகள் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு போலீசார் போலியான ஆவணங்கள் மூலம் பலரும் தமிழகத்தில் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு வழக்குகள் வந்தவண்ணம் இருந்தன, இந்த விவகாரம் குறித்து விசாரணை துவங்கிய மாநில சைபர் கிரைம் போலீசார் இவ்வாறாக போலி ஆவணங்கள் கொடுத்து சிம் கார்டுகள் பெற்றவராகள் விவரங்கள் தயாரித்து அது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநில சைபர் கிரைம் பிரிவு போலீசார் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி அவற்றை முடக்கும் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
குறிப்பாக 55,982 சிம் கார்டுகளை இது வரை அவர்கள் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இது போன்று போலி சிம் கார்டுகளை விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில் இதுவரை முடக்கிய சிம் கார்டுகள் எந்தெந்த சிம் கார்டு பிரதிநிதிகள் மற்றும் கடைகளில் இருந்து பெறப்பட்டது, எந்தெந்த நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக சுமார் 1000க்கும் மேற்பட்ட சிம் கார்டு வெண்டர்களிடம் விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, இந்த அறிக்கை அடிப்படையாக வைத்து ஒரு பரிந்துரையை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவித்திருக்கிறது. இவ்வாறு போலி சிம் கார்டுகள் மூலம் விற்பனை செய்ய வந்த விற்பனை பிரதிநிதிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் கொடுத்த அடிப்படையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் இது போன்ற போலி சிம் கார்டுகள் விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள். தற்போது வரை அது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
The post தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கம் appeared first on Dinakaran.