×

ஊட்டியில் நடைபாதையில் கழிவு நீர் சூழ்ந்தது: பொதுமக்கள், பயணிகள் பாதிப்பு

ஊட்டி: ஊட்டியில் சேரிங்கிராஸ் உழவர் சந்தை பகுதியில் இருந்து தாவரவியல் பூங்கா சாலையை இணைக்கும் நடைபாதையை கழிவு நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இப்பகுதியில் இருந்து கோடப்பமந்து கால்வாயை இணைக்கும் ஒரு கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை ஒட்டியே உழவர் சந்தை பகுதியில் இருந்து பூங்கா சாலையை இணைக்கும் ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கோடை சீசன் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகளும் இந்த நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் நாள் தோறும் மழை கொட்டி வருகிறது. இதனால், கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனுடன் கழிவு நீரும் கலந்து செல்கிறது. நேற்று பெய்த மழையின் போது, மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து இந்த நடைபாதையை சூழ்ந்துள்ளது. இதனால், இந்த நடைபாதையை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நடைபாதையை சூழ்ந்துள்ள மழை நீர் மற்றும் சேற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

The post ஊட்டியில் நடைபாதையில் கழிவு நீர் சூழ்ந்தது: பொதுமக்கள், பயணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Charinggrass Farmers Market ,Botanical Garden Road ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்