×

பண்ருட்டியில் காதலியை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தவர் கைது: போலீசார் அதிரடி

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதலியை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். விடிந்தால் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலன் வீட்டு முன் விடியவிடிய காதலி தர்ணாவில் ஈடுபட்டார். காதலி ரம்யா போராட்டத்தை அடுத்து மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை சுப்பிரமணியனை போலீஸ் கைது செய்தது. ரம்யாவை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய சுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார்.

காதலன் வீட்டு வாயிலில் இரவு முழுவதும் பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் தர்ணா போராட்டம் நடத்தியதை அடுத்து காதலன் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். மணக்கோலத்தில் இருந்த மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பண்ருட்டியில் காதலியை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தவர் கைது: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Pranruti ,Police Action ,Cuddalore ,Pantruti ,Manruti ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்