×

வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 25மாவட்டங்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் நியமிக்கப்பட்ட நிலையில் 12மாவட்டங்களில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரியலூர்-அருண் ராய், கோவை-ஜெயஸ்ரீ முரளிதரன், கள்ளக்குறிச்சி-பிரதீப் யாதவ், காஞ்சிபுரம்-செந்தில்குமார், நாகை- ரமேஷ்சந்த் மீனா, நாமக்கல் குமரகுருபரன், புதுக்கோட்டை- நாகராஜன், ராமநாதபுரம்- நந்தகுமார், ராணிப்பேட்டை ஷில்பா பிரபாகர் சதீஷ், சேலம்-சங்கர், திருப்பத்தூர்- ககன்தீப் சிங் பேடி, திருப்பூர் விஜயகுமார் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post வளர்ச்சித் திட்ட பணிகளை கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...