×

வைகை ஆற்றில் அழுகிய உடல் மீட்பு

 

மதுரை, மே 25: மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரோட்டில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நேற்று இரவு ஒரு உடல் மிதப்பதாக செல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதற்கிடையே தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த தல்லாகுளம் போலீசார் உடலை மீட்டனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால், ஆண் உடல் என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அழுகிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

The post வைகை ஆற்றில் அழுகிய உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Waikai river ,Madurai ,Vaigai River ,Dindigul ,Dinakaran ,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...