×

திருச்சி புறநகர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி, முதியவர் பலி

துறையூர், மே 25: திருச்சி மாவட்டத்தில் நேற்று வெவ்வேறு விபத்துக்களில் துறையூர் அருகே மூதாட்டியும், துவரங்குறிச்சி அருகே முதியவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே எரகுடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சஞ்சீவி மனைவி பாப்பாத்தி (77). இவர் எரகுடியிலிருந்து திருமானூர் செல்லும் சாலையில் புறக்காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டாரஸ் லாரி மூதாட்டி மீது மோதியது. இதில் பாப்பாத்தி தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற உப்பிலியபுரம் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் செல்வராஜ் (40) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.
துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலை வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு சாலை அடைக்கம்பட்டியைச் சேர்ந்த ஆண்டியப்பன் (65). இவர் துவரங்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றார். சாத்தூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஆண்டியப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று ஆண்டியப்பன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய காரில் வந்த சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (39) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சி புறநகர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டி, முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dharayur ,Dwarangurichi ,Trichy district ,
× RELATED துறையூர் அருகே பரிதாபம் தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு