×

30ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயம் சார்ந்த கோரிக்கை தெரிவித்து பயன்பெறலாம்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

திருவாரூர், மே 25: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 வரை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.மேற்படி, கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post 30ம் தேதி குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயம் சார்ந்த கோரிக்கை தெரிவித்து பயன்பெறலாம்: திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur District Collector ,Thiruvarur ,Tiruvarur ,
× RELATED திருவாரூர் கோயிலில் நாளை ஆழித்தேரோட்டம்: 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு