×

ஓபிஎஸ் போன்ற துரோகிகளிடமிருந்து அதிமுகவை எடப்பாடி காப்பாற்றி வருகிறார்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கைக்கு பதில் அளித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
45 ஆண்டு கால உழைப்பால், ஒரே இயக்கத்தில் உழைத்து, கிளை கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 முதல் 2021 வரை தமிழகத்தின் முதல்வராக திறம்பட ஆட்சி நடத்தியவர்.

ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் போன்ற துரோக கூட்டத்திடம் இருந்து அதிமுகவை காப்பாற்றி, ஒற்றுமையாக செயல்பட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்சி செய்தபோது, தமிழக அரசு துறைகள் இந்திய அளவில் முதலிடம் மற்றும் விருதுகள் பல பெற்று சாதனை படைத்தது.

ஜெயலலிதா அரசில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளதாக பொத்தாம் பொதுவாகக் கூறியுள்ளார். இவ்வாறு ஜெயக்குமார் கூறியுள்ளார்.

The post ஓபிஎஸ் போன்ற துரோகிகளிடமிருந்து அதிமுகவை எடப்பாடி காப்பாற்றி வருகிறார்: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,OPS ,Former minister ,Jayakumar ,CHENNAI ,Minister ,Finance Minister ,Thangam Tenara ,Dinakaran ,
× RELATED 100 யூனிட் விலையில்லா மின்சாரம்...