×

புது பாஸ்போர்ட் ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எம்பி பதவியில் இருந்து மார்ச் 23ம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அரசாங்க பாஸ்போர்ட்டை திருப்பி ஒப்படைத்துவிட்டார். இந்நிலையில் அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்டுள்ள ராகுல்காந்தி புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு முடிவு செய்தார். அவர் மீது பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

எனவே தடையில்லா சான்று வழங்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் வைபவ் மேத்தா, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு(நாளைக்கு) ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட வழக்கை தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமி இது குறித்து பதிலை பதிவு செய்வதற்கு உரிமை உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

The post புது பாஸ்போர்ட் ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Rahul ,New Delhi ,Congress ,president ,Rahul Gandhi ,Rahul Manu ,Dinakaran ,
× RELATED மோடியின் பொய்களால் வரலாறுகள் மாறி...