×

எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: ரஷ்யா தகவல்

கீவ்: ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் அத்துமீறி ஊடுருவி தாக்கியதாகவும் அந்த தாக்குதலை முறியடித்ததாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் எல்லையில் உள்ள பெல்கோராட் மாகாணத்துக்குள் உக்ரைனின் படைகள் கடந்த திங்கள்கிழமை ஊடுருவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அம்மாகாணத்தின் எல்லை பகுதியில் இருதரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இகோர் கோனஷென்கோவ் கூறிய போது, “இந்த மோதலில் தரை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. 12 பேர் காயமடைந்தனர். புலம் பெயர்தலின் போது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்,” என்று தெரிவித்தார்.

ஏறக்குறைய 24 மணி நேரம் நடந்த இந்த மோதலில் 70க்கும் மேற்பட்ட உக்ரைன் ஆதரவு படையினர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெல்கோராட் மாகாண ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், “ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய ஏராளமான உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன,” என்று தெரிவித்தார்.

The post எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: ரஷ்யா தகவல் appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,Kiev ,Belgorod ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு