×

பேருந்து நிறுத்தத்தில் பயணியை தாக்கிய போதை ஆசாமி: சப்-இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ

சென்னை: சென்னை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நியூ உட்லாண்ட்ஸ் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகள் உட்பட பலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த ஏழுமலை என்ற பயணியிடம் மதுபோதையில் வந்த நபர் எல்லோ பேஜஸ் பஸ் நிறுத்தம் எங்கே இருக்கிறது என்று கேட்டுள்ளார். அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் ஏழுமலை எதுவும் கூறாமல் தள்ளி போய் நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ஏழுமலையின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற சப்-இன்ஸ்ெபக்டர் வாகனத்தை நிறுத்தி விட்டு போதையில் இருந்த நபரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது போதையில் இருந்த நபர் தன்னை விட்டு விடும்படி அவரது காலில் விழுந்து ெகஞ்சியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கு பேருந்துக்காக நின்று கொண்டு இருந்த சக பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

The post பேருந்து நிறுத்தத்தில் பயணியை தாக்கிய போதை ஆசாமி: சப்-இன்ஸ்பெக்டர் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ appeared first on Dinakaran.

Tags : Chennai ,New Woodlands ,Dr. Radhakrishnan Road, Mylapore, Chennai ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...