×

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: காங். எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை

புதுடெல்லி: பிரதமர் பதவிக்கான தகுதியான நபர் யார் என்பது குறித்து மக்களின் மனநிலை அறிய லோக் நிதி- சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு தனியார் தொலைக்காட்சி என்டிடிவியுடன் சேர்ந்து கருத்து கணிப்பு நடத்தியது.19 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக 43 சதவீதத்தினரும், ராகுல் காந்திக்கு ஆதரவாக 27 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எம்பியும், நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடாவான மாணிக்கம் தாகூர் தனது டிவிட்டர் பதிவில்,காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே அவருக்கு 27 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. எனவே,அவர் பெயரை அறிவித்து விட்டு அவருக்கான மக்களின் ஆதரவை நாம் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

The post ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்: காங். எம்பி மாணிக்கம் தாகூர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,PM ,Congress ,Manickam Tagore ,New Delhi ,Lok Nidhi ,CSTS ,Prime Ministerial ,Manikam Tagore ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…