×

வெயில் தாங்க முடியாமல் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபையன் (62). இவரது மனைவி கஸ்தூரி (60). கடந்த 20 நாட்களாக வெயில் கொடுமை தாங்க முடியாமல் கஸ்தூரிக்கு உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று வெயில் அதிகமாக இருக்கவே உடல் எரிச்சல் தாங்க முடியாமல், அதே கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த மோரணம் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post வெயில் தாங்க முடியாமல் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chinnabayan ,Vembakkam Thaluka Puteribullavakam ,Thiruvannamalai district ,Vembakkam Thaluka Puteribullawakam ,Musk ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...