×

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று ஓய்வு பெறுவதையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான சி. வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். நாளை(மே 25ம் தேதி) முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பிறந்த நீதிபதி வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்டப் படிப்பை சென்னையில் முடித்தார்.

1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய வைத்தியநாதன், 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது ஒன்றிய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : S. Vaithyanathan ,Justice ,Madras High Court ,President ,Dravupathi Murmu ,Chennai ,Drarubathi Murmu ,Chief Justice ,Chennai High Court ,Madras High… ,Dravupati Murmu ,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...