×

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் ஆம்னி பஸ் பழுதானதால் பயணிகள் 6 மணி நேரம் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் நேற்றிரவு தென்காசிக்கு சென்ற ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் பழுது ஏற்பட்டது. அதில் சென்ற பயணிகள் சுமார் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்றிரவு தென்காசிக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து கிளம்பியது. இப்பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இப்பேருந்து நேற்றிரவு 10 மணியளவில் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் வந்தபோது, திடீரென இன்ஜினில் பழுதாகி, வாகனங்களுக்கு இடையே நின்று போனது. இதைத் தொடர்ந்து, அந்த தனியார் ஆம்னி பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

பரனூர் சுங்கச்சாவடி பகுதியின் நுழைவுவாயலில் தனியார் ஆம்னி பேருந்து பழுதாகி நின்றதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்ற வாகன ஓட்டிகளிடையே பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இதற்கிடையே தனியார் ஆம்னி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள் டிரைவர், நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், அப்பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி விடப்படாமல், இன்று அதிகாலை 4.30 மணிவரை சுமார் 6 மணி நேரம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலேயே காத்திருந்தனர்.

பின்னர், அப்பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த அனைவருக்கும் இன்று காலை பணத்தை திருப்பி தருவதாக தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம் உறுதியளித்தது. இதனால் பயணிகள் போராட்டத்தை கைவிட்டு, பரனூர் சுங்கச் சாவடியில் இருந்து மாற்று பேருந்து மூலமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்றனர்.

The post செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் ஆம்னி பஸ் பழுதானதால் பயணிகள் 6 மணி நேரம் அவதி appeared first on Dinakaran.

Tags : Passengalputtu ,Omnibus ,Paranur Sunkashav ,Chengalbatu ,chengalpattu ,south kashakasi ,paranur sunkashawar ,Paranur Sungavadu ,Chengalpadu ,Dinakaran ,
× RELATED விதிமீறி இயங்கிய 148 ஆம்னி பஸ்...