×

ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 வது மாடியில் இருந்து சிறுவன் குதித்து தற்கொலை..!!

ஆவடி: ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 வது மாடியில் இருந்து சிறுவன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 அடுக்கு தளம் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 2ஆவது தளத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு லோக்நாத் என்ற 17வயது மகன் உள்ளார்.

இவர் 10ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு, 11ஆம் வகுப்பில் சேர இருந்தார். இந்நிலையில் லோக்நாத் வீட்டு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் லோக்நாத் 2ஆவது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து ஆவடி போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் லோக்நாத் சாதாரணமாக நடந்து வந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தது.புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாணவர் தற்கொலைகான காரணம் குறித்து பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் 14 வது மாடியில் இருந்து சிறுவன் குதித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Avadi Paruthipattu ,Aavadi ,Aavadi Paruthipattu ,
× RELATED ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் இணையதள...