×

ஸ்ரீகாளஹஸ்தி கைலாசகிரி மலை பனச கோணாவில் புதையல் வேட்டையில் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் அகற்றினார்களா? போலீசார் தீவிர விசாரணை

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி கைலாசகிரி மலை பனகோணாவில் புதையல் வேட்டையில் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் அகற்றினார்களா?போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகர எல்லை பகுதியில் ராஜிவ் நகர் காலனி உள்ளது. இதன் பின்புறத்தில் உள்ள கைலாச கிரி மலைகளில் பனச கோணா உள்ளது. இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலுக்கு பக்தர்கள் அடிக்கடி சென்று சிவலிங்க உருவத்தில் உள்ள பரமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வதோடு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் பக்தர்கள் சிவனுக்கு அபிஷேகம் செய்யவும் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யவும் சென்றனர்.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டில் இக்கோயிலில் உள்ள நந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்றனர். ஸ்ரீகாளஹஸ்தி டி.எஸ்.பி. மற்றும் இரண்டாம் நகர போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், ராஜிவ் நகர் காலனியில் இரண்டு பேர் சந்தேகிக்கும்படியாக இருந்தவர்களை கைது செய்து விசாரணை செய்தனர். ஆனால் நந்தி சிலையைச் சேதப்படுத்தியது யார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் அக்கோயிலில் நந்தி மற்றும் சிவலிங்கம் அடிப்பகுதியில் புதையல் இருப்பதாக அடிக்கடி அக்கோயிலில் மர்ம நபர்கள் புதையலை தேடி தோண்டுவது நடந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த சில பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பனச கோணாவிற்கு சென்றனர். அங்கு இருந்த (சிலை) சிவலிங்கம் அகற்றப்பட்டிருப்பதை கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த பகுதியில் புதையலுக்காக தோண்டிய அடையாளங்கள் இருந்ததை சமூக வலைத்தளங்களில் படங்களுடன் பதிவிட்டனர்.
இதனை கவனித்த ஸ்ரீகாளஹஸ்தி இரண்டாம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜுனா கூறுகையில், சிவலிங்கம் அகற்றப்பட்டது குறித்து இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை.

இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். சிவலிங்கத்தை அகற்றியதோடு மர்ம நபர்கள் அங்கு புதையல் வேட்டையில் ஈடுபட்டது ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஸ்ரீகாளஹஸ்தி கைலாசகிரி மலை பனச கோணாவில் புதையல் வேட்டையில் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் அகற்றினார்களா? போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Shiva Lingam ,Srikalahasti ,Kilasagiri ,Mountain Panasa Kona ,Srikalahasthi Khailasagiri ,Panagona ,Srikalahasti Khailasagiri ,Mountain Panasakkona ,Dinakaran ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்