
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- வானிலையியல் ஆய்வு மையம்
- சென்னை
- காரைக்கால்
- வானிலையியல் ஆராய்ச்சி நிலையம்
சென்னை: வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மே 26,27,28-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மே 26 முதல் 28 வரை தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். மே 27, 28-ல் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.