×

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் அமைச்சர்கள் ஈஸ்வரன், சண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடைபெறுகிறது. தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முதல்வர் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

இன்று காலையில் இருந்தே முதல்வரின் திட்டப்பணிகள் துவங்கின. முதற்கட்டமாக , சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து , இன்று மாலை 4 மணி அளவில் 350 தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இன்று பங்கேற்கும் முதலீட்டார்கள் மாநாட்டின் மூலம் கிடைக்கும் முதலீடுகள் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.! இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Singapore ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை...