×

தஞ்சாவூரில் வீட்டு பூட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

 

தஞ்சாவூர், மே 24: தஞ்சாவூரில் பட்டப்பகலில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மனோஜிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன்- மகாராணி தம்பதி. (55). இவர்கள் இருவரும் நேற்று வீட்டை பூட்டி விட்டு தஞ்சை நகர்ப்பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். மாலை வீட்டிற்கு வந்தபோது முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த பதினொன்றரை பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மகாராணி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டு பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தஞ்சாவூரில் வீட்டு பூட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Manojipatti… ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...