×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

குத்தாலம், மே 24: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், கோமல் ஊராட்சி, செம்பியன்கோமல் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மின்சார வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் உடனே சாலையோரம் சேதமடைந்து கிடக்கும் மின் கம்பத்தை உடனே அப்புறப்படுத்தி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kutthalam ,Kaliyamman temple ,Sembiankomal ,Mayiladuthurai district ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு