×

தமிழ்நாட்டில் வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: மாவட்ட அளவில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று மற்றும் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,* கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார். * மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த சிவ.வீ.மெய்யநாதன் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

The post தமிழ்நாட்டில் வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...