×

தலைமை செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துக்கு அரசு அங்கீகாரம்

சென்னை: தலைமை செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: தலைமை செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அச்சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஆய்வு செய்து, அந்த சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி, 1974ம் ஆண்டின் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கங்களின் அங்கீகார விதிகளுக்கு உட்பட்டு தலைமை செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. சங்கத்தின் முகவரி மாற்றம், நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டாலும் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும். சங்கம், அரசியல் சம்பந்தப்பட்ட பொருள்கள் பற்றி விவாதிக்கவோ அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது.

The post தலைமை செயலக அலுவலக உதவியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கத்துக்கு அரசு அங்கீகாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Secretariat Office Assistants and Sanitation Workers Association ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...