×

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்: அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து முனையத்திலிருந்து அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் இயக்குவது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்டரங்கில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்திலிருந்து அரசு பேருந்துகளை போக்குவரத்து நெரிசலின்றி மாற்று வழிபாதையில் ஜி.எஸ்.டி சாலை வழியாக செல்வது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, வனத்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் விஜயலட்சுமி, போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ், சென்னை மாவட்ட வன அலுவலர் சண்முகம், கிண்டி தேசிய பூங்கா வன உயிரின பாதுகாவலர் பிரசாந்த், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம்: அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Klambakkle bus ,Minister ,Sekar Babu ,Chennai ,Klambakkam ,Klambakkam Bus Station ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...