×

ராஜபாளையம் அருகே காணாமல்போன தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..!!

விருதுநகர்: ராஜபாளையம் அருகே காணாமல்போன தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மனைவி ராமுத்தாய் இவர்களுக்கு மகள்கள் நிஷா(6), அர்ச்சனாதேவி (3) எனும் இரு பெண் குழந்தைகள் உள்ளது. முத்துக்குமார் மற்றும் ராமுத்தாய் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் என தெரிகிறது. இதனால், ராமுத்தாயை அவரது கணவர் முத்துக்குமார் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ராமுத்தாய் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விபரீத முடிவை எடுத்தார் ராமுத்தாய் இரண்டு பெண் குழந்தைகளுடன் அவர் அருகில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். குழந்தைகள் 2 பேரும் முச்சுத் திணறி துடிதுடித்து உயிரிழந்தனர். தாயும் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தாய் ராமுத்தாயின் உடலையும் மூன்று வயது பெண் குழந்தை அர்ச்சனாதேவியின் உடலையும் முதலில் மீட்டனர்.

6 வயதான மூத்த மகள் நிஷாவின் உடல் தேடும் பணியில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு நிஷாவின் உடலும் மீட்கப்பட்டது. மூவர் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் இருமகள் உட்பட மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ராஜபாளையம் அருகே காணாமல்போன தாய் மற்றும் இரு பெண் குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Virudhunagar ,Virudhunagar District ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...